ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற படம் குற்றம் கடிதல். பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்ற குற்றம் கடிதல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வென்றது. பிரம்மா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்காக தீவிர நடிப்புப் பயிற்சியில் ஜோதிகா ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் பிரம்மா தற்போது தனது அடுத்த பட பணிகளை தொடங்கிவிட்டார்.
பெண்களின் பிரச்சினைகளை அலசும் இப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். முதற்கட்டமாக, ஜோதிகா மற்றும் அவரோடு நடிக்கும் படக்குழுவினருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார் பிரம்மா. இப்பயிற்சி சுமார் 20 நாட்கள் நடைபெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள ஏசி அரங்கத்தில் இப்படத்தின் போட்டோஷூட் நடத்தப்பட்டது.
ஜோதிகாவுடன் நாசர், ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் போட்டோஷூட்டில் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டோஷூட்டின்போது ஜோதிகாவுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், மீடியாக்கள் யாரும் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்காகவும் ஜிம்பாய்ஸ்களை பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்தனர். ஜோதிகாவின் பாதுகாப்புக்காக சூர்யா செய்த ஏற்பாடாம் இது.
'36 வயதினிலே' படத்தை தயாரித்த சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனமும் 'கிரிஸ் பிக்சர்ஸ்' நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.