விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தலைப்பை படிச்சிட்டு சண்டைக்கு வராதீங்க, இது ஒரு சினிமாவோட டைட்டில். இப்பல்லாம் ஏதாவது புதுமை பண்றோம்னு தலைப்புல புதுமை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்', 'உங்களுக்கு ஒழுங்கா கடலை போடத் தெரியுமா', 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இப்படி ஏராளமான தலைப்புகள் புதுமை செய்ய இருக்கிறது.
இந்தப் படத்தில் அசார் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, மன்சூரலிகான், உமா பத்மநாபன், டாக்டர் ஷர்மிலி உள்பட பலர் நடிக்கிறார்கள். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹய்னா தயாரித்து, இசை அமைக்கிறார், வம்சிதரன் ஒளிப்பதிவு செய்கிறார். வி.விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார்.
“ஏண்டா தலையில எண்ணெய் வெக்கல” என்ற வாக்கியத்தை ஒவ்வொரு இளைஞனும் தன் தாயிடமிருந்து கேட்டிருப்பான். இது பாசத்தின் வெளிப்பாடு. தாயின் பேச்சை கேட்காமல் ஹீரோ தலையில எண்ணெய் வைக்காம வெளியில போகிறார். தலையில் எண்ணை இல்லாத காரணத்தால் ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். அது என்ன பிரச்னை, அந்த பிரச்னையிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்கிற கதை. படப்பிடிப்புகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. முழுநீள காமெடி படம் என்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.