மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் சுதீப். நான் ஈ படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து பாகுபலியில் சிறிய ரோலில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள ‛முடிஞ்சா இவன புடி' படத்தில் நித்யா மேனனுடன் நடித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதுப்பற்றி சுதீப் பேசும்போது... ‛‛நான் ஈ படத்துக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டார்கள், நான் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ் மக்கள் எனக்கு கொடுத்த அன்பு ரொம்ப அபரீதமானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்தது புது அனுபவம், ரெண்டு ரோலில் நடித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராகவும், வில்லன் ரோலிலும் நடித்துள்ளேன். நிறைய தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். நித்யா மேனன் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக சிறந்த நடிகை அவர். விரைவில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணனும் என்கிறார் சுதீப்.