மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் ரஜினி நடித்து வெளிவந்துள்ள, கபாலி திரைப்படத்தால், தெலுங்கானா மாநிலத்தில், ஒரு புத்தகத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கபாலி படத்தில், அறிமுக காட்சியில், மை பாதர் பாலய்யா என்ற புத்தகத்தை ரஜினி படித்துக் கொண்டிருப்பார். படம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த புத்தகம் குறித்து மக்கள் தேடத் துவங்கியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் சத்தியநாராயணா, தெலுங்கில் எழுதிய, மா நானயா பாலையா என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு தான், படத்தில் இடம்பெற்றுள்ளது. கரீம் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணா, தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும் வகையில், தன் தந்தை பாலையா சந்திந்த வாழ்க்கை, சமூகப் போராட்டங்கள், அதில் இருந்து மீண்டு, தற்போது தன் குடும்பம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து, இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
கடந்த, 2011ல், இந்த புத்தகம் முதலில் வெளிவந்தது. கபாலி படம் வெளியான பின், இவருக்கு பலர் வாழ்த்துக்களை கூறத் துவங்கியுள்ளனர். தன் புத்தகத்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து சத்தியநாராயணா அனுப்பி செய்தியை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் ரஞ்சித் இவரை அழைத்து பாராட்டியுள்ளார்.