'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடித்த 'கபாலி' மாபெரும் எதிர்பார்ப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. கபாலி படத்திற்கு ஊடகங்களின் விமர்சனங்களும், ரசிகர்களின் கருத்துக்களும் இருவேறாக இருந்தன. கபாலி படம் பற்றிய ரசிகர்களின் கருத்து எப்படி இருந்தால் என்ன?, 'தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வசூலில் எப்போதும் நான் தான் கிங்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆமாம், கபாலி படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் கபாலி படத்தின் கிளைமாக்ஸ், இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியைப் போல் அமைந்திருப்பதால் கபாலி-2 உருவாகும் என இருதினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதுப்பற்றி தாணு அளித்துள்ள பேட்டியில் விடையளித்திருக்கிறார்.
அதில் தாணு கூறியிருப்பதாவது... ‛‛கபாலி-2 படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தால் அது என் பாக்கியம். ஆனால் அது ரஜினி சாரின் கையில் தான் இருக்கிறது. அவர் சரி என்றால் நான் தயாரிப்பாளராக தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.