மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவின் சில முக்கிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற தரமான படங்களை இயக்கியவர். தாரைத்தப்பட்டையைத் தொடர்ந்து விஷால், ஆர்யா போன்ற சில முன்னணி ஹீரோக்களை இணைத்து குற்றப்பரம்பரை பாணியில் ஒரு கதையை அவர் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தற்போது அதுபற்றிய தகவல்கள் இல்லை. இருப்பினும் விரைவில் தனது அடுத்த படம் குறித்த தகவலை பாலா வெளியிடுவார் என்று தெரிகிறது.
மேலும், மற்ற இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கும் பாலா, தன்னை சந்திக்கும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட தனது நெருக்கமானவர்களிடம் எப்போதுமே ஒரு அட்வைஸ் கொடுப்பாராம். அதாவது யாராக இருந்தாலும் அதிகாலையிலேயே எழுந்து விட வேண்டும். அப்போது நான் சிந்திப்பது சிறப்பானதாக இருக்கும். அதனால் இரவு தாமதமாக தூங்காமல் முன்கூட்டியே தூங்கி, சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடுங்கள். மனது தெளிவாக இருக்கும் அந்த நேரத்தில் கதைகளைப்பற்றியோ அல்லது வேறு விசயங்களைப்பற்றியோ யோசியுங்கள். அப்போது உங்களிடமிருந்து சிறப்பான சிந்தனை வெளிப்படும் என்கிறாராம். அவரது இந்த கருத்தினை பெரும்பாலான உதவி இயக்குனர்கள் தாங்கள் கடைபிடித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.