விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
புதுமுக இயக்குனர் சூர்யா இயக்கியுள்ள படம் அன்னாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும். வடசென்னை மக்களின் வாழ்வியலில் கலந்த ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ஒரு கானா பாடலை சமீபத்தில் கானா பாலா பாடியுள்ளார். பத்மாவதி அடியே பத்மாவதி, சிரிக்குதடி பாரே சிரிப்பா சிரிக்குதடி -என்று தொடங்கும் அந்த பாடலின் வரியைக்கேட்டதுமே, அதில் அதிக இம்ப்ரஸ் ஆகி விட்டாராம் பாலா.
அதையடுத்து, அந்த பாடலை எழுதிய டைரக்டர் சூர்யாவை அழைத்து, வரிகள் ரொம்ப பிரமாதமாக உள்ளது. அதேபோல் டியூனும் அருமையாக உள்ளது. பொதுவாகவே வடசென்னை கானா பாடல்கள் என்றாலே நான் அதிக ஈர்ப்பாகி விடுவேன். அதிலும், பத்மாவதி அடியே பத்மாவதி -என்று தொடங்கும் வரிகள் என்னை அதிகமாக கவர்ந்து விட்டன. நான் இந்த மாதிரி பாடலை பாடுவதற்கு முன்பே அதை ரசித்து பாடினால் அந்த பாடல்கள் பெரிய ஹிட்டாகி விடும்.
அதோடு, கானா பாடல் என்றால் பசங்க ஜாலியாக பாடுவது போல்தான் சமீபகாலமாக அதிகமாக இடம்பெற்று வருகிறது. ஆனால் இந்த பாடல் ஒரு ஹீரோ, தனது மனைவிக்கு காதலன் இருந்த விசயத்தை தெரிந்த பிறகு சோகமாக பாடும் பாடல் என்பதால், அந்த பாடலின் சூழலும் என்னை வெகுவாக பாதித்து விட்டது. அதனால், அந்த ஹீரோ கதாபாத்திரமாக நான் மாறி பாடலை பாடிய போது நிஜமாலுமே, உருகி விட்டேன் என்று தனது பீலிங்ஸை சொன்னாராம் கானா பாலா.