விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் அதிலும் ஒரு வித்தியாசமாக அவர் நடித்த 'தங்க மகன்' படம் மற்ற ஊர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையில் மட்டும் 247 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த அளவிற்கு மதுரை மக்களை 'தங்க மகன்' கவர்ந்தான்.
1983 நவம்பர் 4ந் தேதி வெளியான இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பூர்ணிமா ஜெயராம், ஏ.ஜெகநாதன் இயக்கி இருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். ரஜினிக்காகவே உருவாக்கப்பட்ட பழிவாங்கும் ஆக்ஷன் கதை. இதில் ரஜினி 'பெஷவாடா பீமாரெட்டி' என்ற இன்னொரு தெலுங்கு மைனர் கெட்அப்பில் நடித்திருந்தார். அந்த வேடம் மதுரை ஜனங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அதோடு படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். “பூ மாலை ஒரு பாவையானது...”, “மச்சான பாருடி மச்சமுள்ள ஆளுடி...”, “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ....” “அடுக்குமல்லி இது ஆள் பிடிக்குது...” போன்ற இனிமையான பாடல்களை இப்போது கேட்டாலும் காதில் தேன்பாயும். 'நுவ்வா நேனு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் பிரமாண்ட வெற்றி பெற்றது. சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பனும், தியாகராஜனும் இணைந்து தயாரித்திருந்தனர்.