நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
அந்தக்கால சாக்லெட் ஹீரோ ரவிச்சந்தின். ரவிசந்திரனின் பூர்வீகம் திருச்சி என்றாலும் அவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மலேசியாவில் தான். அவர் தந்தை அங்கு வெளிவந்த ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். பள்ளி படிப்பை முடித்த ரவிச்சந்திரன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவுக்கு வந்தார். அப்போது அவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அவர் சினிமாவில் நடிக்கிற எண்ணத்தில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழ் படங்கள்கூட அதிகம் பார்த்தது கிடையாது.
சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து படிக்கும் திட்டத்துடன் வந்தார். அப்போது ரவிச்சந்திரன் செம ஸ்மார்ட்டாக, ஸ்டைலாக இருப்பார். சிகரெட்டை ஸ்டைலாக குடிப்பார். மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவர் அவர். ரவிச்சந்திரனின் குடும்ப நண்பர் சுந்தர் என்பவர் ஒளிப்பதிவாளர் வின்செண்டிடம் உதவியாளராக இருந்தார். அப்போது 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிக்க ஒரு அழகான புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் ஸ்ரீதர். இந்த விஷயத்தை ரவிச்சந்திரனிடம் சொன்ன சுந்தர் “நீ ஆடிசனுக்கு போனால் நிச்சயம் செலக்ட் ஆகிவிடுவாய்” என்று கூறினார். அப்போது ரவிச்சந்திரனுக்கு ஸ்ரீதர் யார் என்றே தெரியாது. “சரி உங்கள் ஆசைக்காக வருகிறேன். ஆனால் எனக்கு நடிக்க ஆர்வம் இல்லை” என்றார்.
ஸ்ரீதர் அலுவலகத்தில் ஆடிசன் நடந்தது. ரவிசந்திரன், ஸ்ரீதர் முன்னால் கால்மேல் கால்போட்டு அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்து உங்களுக்கு வேண்டுமா என்று அவரிடம் நீட்டினார். ஸ்ரீதர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டவர் எழுந்து வெளியே வந்தார். சுந்தர் பதறியடித்து வந்து “அய்யா மன்னிச்சிருங்க இந்த பையனை தெரியாம கூட்டிவந்துட்டேன்” என்றார். “அவன்தான் என் படத்தோட ஹீரோ. இப்படி தெனாவெட்டான ஸ்டைலான ஹீரோவைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்” என்றார். டாக்டராகும் ஆசையை தூக்கி எறிந்துவிட்டு ஆக்டர் ஆனார் ரவிச்சந்திரன்.