நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, 2002ம் ஆண்டு தமிழக - கர்நாடக நதி நீர் தொடர்பான பிரச்னை எழுந்தபோது, நதிநீர் இணைப்பிற்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினி அப்போது அறிவித்தார். ஆனால் ரஜினி சொன்னபடி நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை தரவில்லை என்றும், ஒரு மாதத்துக்குள் ரஜினி அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் ரஜினி, ஏற்கனவே அறிவித்தபடி நதிநீர் இணைப்பிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துவிட்டதாக அவரின் சகோதரர் சத்யநாராயண கூறியுள்ளார்.
தஞ்சை கோவிலுக்கு வந்த சத்ய நாராயணா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‛‛அமெரிக்காவில் ரஜினி நலமாக இருக்கிறார். கபாலி படம் ஜூலை 15ம் தேதி ரிலீஸாக இருப்பதாக செய்தி வந்துள்ளது. பட ரிலீஸ்க்கு முன்னர் நிச்சயம் அவர் சென்னை வந்துவிடுவார் என்றார். மேலும் நதிநீர் தொடர்பாக ரஜினி அறிவித்த ரூ.1 கோடி நிதி குறித்த செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினி ஏற்கனவே சொன்னபடி அந்த ஒரு கோடியை தேசிய வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார். நதிநீர் இணைப்பு திட்டம் துவங்கியதும் நிச்சயம் அந்த தொகை அந்த திட்டத்திற்கு கொடுக்கப்படும்''.
இவ்வாறு சத்ய நாராயணா கூறினார்.