மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் இருக்கை அமைப்பின் சார்பில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதின் அவசியம் குறித்த விளக்க விழாவும், தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. இதில் குறுந்தகட்டை வெளியிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டது. அது மட்டும் போதுமா தமிழின் புகழ் உலக அரங்கில் எதிரொலிக்க வேண்டாமா? ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகளுக்கு தனி இருக்கை உள்ளது. தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை இல்லை. தமிழ் சமூகம் எழுந்து நின்றால்தான் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகளை உருவாக்க முடியும். தமிழால் வாழும் வியாபாரிகளும், கல்வி தந்தைகளும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழங்களிலும் தமிழ் இருக்கைகள் கொண்டு வர முடியும். தமிழால் வாழும் நடிகர்கள் கொடுத்தால் போதும். அவர்கள் கொடுக்காவிட்டாலும் ஒரு அறிக்கை விட்டால் போதும் அவர்களது ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கொடுப்பார்கள். தமிழ் மொழிக்காக இதை நீங்கள் செய்யுங்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.