நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
விஸ்வரூபம், சிங்கம், பில்லா, அரண்மனை என பல படங்களின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் உருவாகி வந்த நிலையில், தற்போது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படங்கள் இயக்குவதில் முன்னணி டைரக்டர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை, ஷங்கர்தான் தனது படங்களை பல மொழிகளில் இயக்கி வெளியிட்டு வந்தார். ஆனால் பாகுபலி படத்திற்குப்பிறகு தற்போது சில முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி என இயக்கி வருகின்றனர்.
அந்தவகையில், கமலின் சபாஷ் நாயுடு, ரஜினியின் 2.ஓ படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என உருவாகி வரும் நிலையில், மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்தை தமிழ், தெலுங்கில இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில், பாகுபலிக்கு இணையாக ஒரு சரித்திர படத்தை தேனாண்டாள் பிலிம்சுக்கு இயக்குகிறார் சுந்தர்.சி. இந்த செய்திகள் ஏற்கனவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதோடு சூர்யா நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டதாக இப்போது கூறப்படுகிறது.
அதற்கு காரணம், சுந்தர்.சியின் சரித்திர படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராவதோடு, அந்தந்த மொழிகளில் பிரபல ஹீரோக்களிடம் மொத்தமாக 2 ஆண்டு கால்சீட் கேட்கிறார்களாம். குறிப்பாக, பாகுபலி படத்துக்காக எப்படி பிரபாஸ் 5 படங்களில் நடிக்கும் கால்சீட்டை மொத்தமாக ஒரே படத்துக் காக கொடுத்து நடித்தாரோ அதேபோன்று நடிக்க வேண்டுமாம். ஆனால், இதற்கு அவர்கள் எதிர்பார்க்கிற மாதிரியான முன்னணி ஹீரோக்கள் இன்னும் செட்டாகவில்லையாம். அதனால் தொடர்ந்து நடிகர்களிடம் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.