விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஒவ்வொரு இந்திய திரைப்பட கலைஞனுக்கும் ஆஸ்கர் விருது என்பது பெரும் கனவு. அது சில மூத்த கலைஞர்களுக்கு கவுரவாக வழங்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் ஒருவர் மட்டும் போட்டியிட்டு விருதை வென்றவர். ஆனால் 47 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது சிவாஜி நடித்த தெய்வமகன். அதை இயக்கியர் நேற்று நம்மை விட்டு பிரிந்த ஏ.சி.திருலோகச்சந்தர். தெய்வமகனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு இருந்த அரசியல் சிவாஜிக்கு அந்த விருதை கிடைக்கவிடாமல் செய்தது. அன்றைக்கு மட்டுமல்ல அவர் வாழ்நாள் முழுவதுமே தேசிய விருது கிடைக்காமல் செய்தது அவரின் சொந்த கட்சி.
தெய்வமகன் படத்தில் சிவாஜி அப்பா, இரட்டை மகன்கள் என மூன்று வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒன்றில் அவர் அகோர முகத்துடன் நடித்திருப்பதுதான் படத்தின் ஹெலைட். அகோர முகம் கொண்ட சிவாஜிக்கும், அப்பா சிவாஜிக்கும் நடக்கும் உரையாடல் காட்சி இப்போதும் பிரபலம். இதில் அப்பா சிவாஜிக்கு பண்டரிபாய் ஜோடியாகவும், மகன் சிவாஜிக்கு ஜெயலலிதா ஜோடியாகவும் நடித்திருந்தனர். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார். சித்தூர் நாகய்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார்.
“தெய்வமே... தெய்வமே...நன்றி சொல்வேன்...” “காதல் மலர் கூட்டம் ஒன்று...”, “காதலிக்க கற்றக் கொள்ளுங்கள்...”, “கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...” போன்ற தேனினும் இனிய பாடல்களை கொடுத்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். பெரியண்ணா பிலிம்ஸ் தயாரித்த படத்தை சிவாஜியின் சாந்தி பிலிம்ஸ் 1969ம் ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி வெளியிட்டது. வெள்ளிவிழா கொண்டாடிய இந்தப் படம் சிவாஜி மற்றும் ஏ.சி.திருலோகச்சந்தரின் டாப் 10 படங்களில் ஒன்று.