மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சந்தானத்துக்கு சின்னத்திரையில் முகவரியைக் கொடுத்த நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை வைத்து பெரிய திரைக்கு வந்த சந்தானம், நம்பர் ஒன் காமெடியனாக உயர்ந்த பிறகும், லொள்ளு சபாவின் இயக்குநர் ராம்பாலாவை அருகில் சேர்க்காமலே இருந்தார்.
ராம்பாலாவும் பிடிவாதமாக சந்தானத்திடம் உதவி கேட்காமலே இருந்தார். பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்ட பிறகு மனஸ்தாபம் நீங்கி மீண்டும் நண்பர்காளிகினர். அதன் பிறகே ராம்பாலாவின் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் சந்தானம்.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, லைன் புரட்யூஸராக இருந்து முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ‛தில்லுக்கு துட்டு' என்று பெயரிடப்பட்ட இப்படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நாயகனாக நடிக்கும் முதல் பேய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1-ம் தேதி வெளியாகவிருந்த கபாலி படம் தற்போது பின்வாங்கியதால், அந்த தேதியில் தில்லுக்கு துட்டு படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர். திடீரென்று சந்தானத்தின் தந்தை நீலமேகம் காலமானதால், தில்லுக்கு துட்டு படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீட்டு தேதிகளை சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.