ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
நடிகை லிசியும், இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்க்ள. இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். 14 வருட மணவாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சொத்துக்களை பிரித்துக் கொண்டதோடு விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் லிஸியும், பிரியதர்ஷனும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்ற மலையாள மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன. இதனை கடுமையாக மறுத்து லிஸி கூறியிருப்பதாவது:
நானும், பிரியதர்ஷனும் இணையப் போவதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களின் நோக்கம் எனக்குத் தெரியும். நாங்கள் மீண்டும் இணைவது என்பது ஒருபோதும் நடக்காது. காரணம் நாங்கள் பிரிந்ததற்கான காரணம் அப்படியே இருக்கிறது. அது எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
நான் அனுபவித்த வேதனைகளை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இதுவரை சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அது எங்களோடு இருந்துவிட்டு போகட்டும். இன்னும் 3 மாதத்தில் விவாகரத்து கிடைத்து விடும். அதுவரை என்னை நிம்மதியாக வாழ விடுங்கள். கணவனை பிரிந்து தனிமையில் வாழும் ஒரு பெண்ணை பற்றி தேவையில்லாமல் எழுதலாமா?. இவ்வாறு லிஸி கூறியுள்ளார்.