மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
“வட சென்னை என்றாலே, வெட்டு குத்து, ரத்தம் என்றுதான் சினிமாக்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் பலபகுதி மக்கள் பிழைப்புக்காக வட சென்னையில் வந்து குடியிருந்தாலும் தங்கள் மண் மனம் மாறாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மண் மனம் மாறாத ஒரு காதலை சொல்கிறேன். வியாசர்பாடிதான் கதை களம், வியாசர்பாடி அமுதாதான் அந்த காதல் தேவதை என்கிறார், அழகென்ற சொல்லுக்கு அமுதா படத்தின் இயக்குனர் நாகராஜ். சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்று இயக்குனராகியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: கூத்துப்பட்டறையில் நடிப்பு பயின்ற ரிஜன் ஹீரோ, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்த ஆஷ்ரிதா ஹீரோயின். இருவரையும் வியாசர் பாடியில் பல நாட்கள் உலவவிட்டு அங்குள்ள மக்களை நேரில் பார்த்து ஸ்டடி பண்ண வைத்துதான் படப்பிடிப்புக்கே சென்றோம். அமுதா மீது ரிஜனுக்கு காதல். ஆனால் அமுதாவுக்கு நிரஞ்சனை சுத்தமாக பிடிக்காது. ஆனாலும் ரிஜன் தொடர்ந்து போராடுகிறார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். காதலும் கரைகிறது. அது எப்படி எங்கே கரைகிறது என்பதுதான் கதை. பட்டிமன்றம் ராஜா, சதுரங்கம் வளவன், மகாநதி சங்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் என்கிறார் நாகராஜ்.