மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள 'மருது' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இப்படம் ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான பாசப் பிணைப்பு கொண்ட கதை என இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார். தமிழில் தற்போது பாட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு திறமைசாலிகள் யாரும் இல்லாததால் மலையாளத்திலிருந்து குலப்புள்ளி லீலா என்ற திறமையான நடிகை ஒருவரை அழைத்து வந்திருக்கிறார்கள். மனோரமா இருந்திருந்தால் ஒருவேளை அவர் நடித்திருக்கலாம்.
குலப்புள்ளி லீலா தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லோகித்தாஸ் இயக்கத்தில் 2005ல் வெளிவந்த 'கஸ்தூரிமான்' என்ற படத்தில் தமிழில் முதன் முதலாக நடித்தார். அந்தப் படத்திலேயே யார் இவர் என அனைவரும் கேட்கும் விதத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார்.
'மருது' படத்தில் லீலாவின் நடிப்புப் பற்றி விஷால் கூட “கிராமத்துப் பாட்டியாக மலையாள நடிகை லீலா நடித்திருக்கிறார். நான்தான் கதாநாயகன், ஸ்ரீதிவ்யாதான் கதாநாயகி என்றாலும் பாட்டி பாத்திரம்தான் படத்தின் உயிர்” என்று கூறியிருக்கிறார். லீலா 100க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். 10 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். மலையாள ரசிகர்களைக் கவர்ந்ததைப் போலவே தமிழ் ரசிகர்களையும் கவர்வார் என எதிர்பார்க்கலாம்.