மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்தியாவின் முதல் சோம்பி வகை திரைப்படம் மிருதன். ஜெயம் ரவி, லட்சுமிமேனன் நடித்திருந்த இந்தப் படத்தை நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இமான் இசை அமைத்திருந்தார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார். குளோபல் இன்போடையின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். கடந்த பிப்ரவரி 19ந் தேதி வெளியான இந்தப் படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. தற்போது இந்தப் படம் கனடாவில் நடபெற இருக்கும் பெஃண்டாசியா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. எந்திரன் படத்திற்கு பிறகு தேர்வாகி இருக்கும் தமிழ் படம் மிருதன்.
இதுகுறித்து ஜெயம் ரவி கூறியதாவது: அன்னையர் தினத்தன்று கனடா திரைப்பட விழாவுக்கு மிருதன் தேர்வான செய்தி கிடைத்தது. அம்மாவிடம் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் என் முதல் படம் இது. கலைக்கு எல்லை இல்லை. நல்ல கலை எங்கும் ரசிக்கப்படும், கொண்டாடப்படும் என்பார்கள். அதை இப்போது உணர்கிறேன். மிருதன் ஹாலிவுட் தரத்திலான படம் என்று மீடியாக்கள் பாராட்டின. அது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.