விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த சில வருடங்களாக, சர்வதேச திரைப்பட விழாக்களில் தமிழ்ப்படங்கள் கலந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. அவற்றில் பல திரைப்பட விழாக்கள், அங்கீகரிக்கப்பட்ட விருது விழா என் சொல்லமுடியாது. என்றாலும் அந்த திரைப்பட விழாக்கள் வெளிநாட்டில் நடைபெறுவதினாலேயே அதை பெருமைக்குரியதாக எண்ணுகின்றனர் நம்ம ஊர்கலைஞர்கள்.
'தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்' என்ற பெருமையோடு சமீபத்தில் வெளிவந்த படம் 'மிருதன்'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை இயக்கியவர் 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் ஸோம்பி கதைகள் பிரபலமானவை. அது மட்டுமல்ல அங்கே அவை அவுட்டேட்டட் ஆகியும் விட்டன.
இந்நிலையில், தமிழில் வெளிவந்த முதல் ஹாரர் படம் என்ற பெருமையோடு 'மிருதன்' படம் வெளியானது. அதனாலேயே அப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் 'ஃபேன்டஸியா இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலி'ல் திரையிடப்படுவதற்குத் தேர்வாகியிருக்கிறது. இந்தத் தகவலை ஜெயரம் ரவியே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.