மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கொம்பன், வேதாளம் படங்களுக்குப்பிறகு ஜெயம்ரவியுடன் மிருதன் படத்தில் நடித்த லட்சுமிமேனனுக்கு அதையடுத்து படங்கள் இல்லை. அதனால் கேரளத்துக்கு திரும்பிச்சென்று விட்டார். அதோடு அடுத்தபடியாக தனக்கு பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகள் வரும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு பெரிதாக இல்லையாம். ஏதாவது படங்கள் வந்தால் பார்க்கலாம் என்கிற மனநிலையில்தான் இருந்து வந்தாராம். ஆனால் அந்த நேரம்தான் தனுஷ், விஜயசேதுபதி போன்ற ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து லட்சுமிமேனனை தேடிச்சென்றிருக்கிறது.
இதை துளியும் எதிர்பார்க்காத லட்சுமிமேனன், அந்த செய்தியைக்கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் சிலிர்த்துப் போனாராம். அதோடு, அந்த படங்களின் கதை சொல்ல வேண்டுமா? என்று இங்கிருந்தபடியே சம்பந்தப்பட்டவர்கள் லட்சுமிமேனனைக் கேட்டதற்கு, கதையெல்லாம் சொல்ல வேண்டாம். நீங்கள் சொல்லும் இரண்டு நடிகர்களுமே பெரிய நடிகர்கள். அதோடு நல்ல கதைகளில் மட்டும்தான் நடிப்பார்கள். அதனால் நான் கதை கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறி விட்டாராம்.