'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
ரஜினி இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ள கபாலி படம் ரிலீசுக்கு வேகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக 5 நாட்களாக டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. அதோடு, இதற்கு முந்தைய தனது படங்களில் பெரும்பாலும் தனது சமகாலத்து நடிகர் நடிகை களுடன் பயணித்த ரஜினி இந்த படத்தில் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித் மற்றும் கலையரசன், மைம் கோபி ராதிகா ஆப்தே, ரித்விகா என இளவட்ட நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்திற்காக சென்னை, டெல்லியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வந்த ரஜினி, தற்போது சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடந்து வரும் 2.ஓ படப்பிடிபபில் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த லொகேசனில் ஜூன் மாதம் 3-ந்தேதி வரை படப்பிடிப்பு தொடர்ச்சியா கநடைபெறுகிறது.
இந்த நிலையில், டில்லியில் நடந்த படப்பிடிப்புக்கு பிறகு ஓய்வில் இருந்து வரும் ரஜினியை, நேற்று சென்னை வந்த இலங்கை நடிகரும், எம்.பியுமான ராம் நாயக் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பு ரஜினியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ரஜினி தரப்பு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் ராம்நாயக் தனது டுவிட்டரில் ரஜினியை தான் சந்தித்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.