மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், ஆகிய 3 அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடந்தது. இதில் தெறி படம் தொடர்பாக கலைப்புலி தாணுவுக்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே இருந்த பிரச்சினை பேசி தீர்க்கப்பட்டது.
திரைப்பட வளர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கவும், அமைய இருக்கும் புதிய அரசிடம் பேசி திரைப்படத்துறைக்கு தேவையான சலுகைகளை பெற்றுத் தரவும், உயர்மட்ட திரைப்பட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியமும், உறுப்பினர்களாக கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு வாரமும் இந்த குழு கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும், குழுவின் முடிவே இறுதி முடிவாகவும் இருக்கும்.
மாதத்தில் ஒரு வாரம் சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியிடுவது, திரைப்படங்களுக்கான அரசு மானியத்தை பெற்றுத் தருவது, திரைப்பட கட்டணத்தை முறைப்படுத்தி கனிணி மயமாக்குவது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் தயாரிப்பாளர்கள் கொடுத்திருக்கும் முன்பணம் தொடர்பாக முடிவெடுப்பது, திரையரங்கின் உரிமத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிப்பது, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏற்படும் அபிரிமிதமான நஷ்டத்தை தவிர்ப்பது என்ற இந்த 6 பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு குழு ஆலோசித்து முடிவெடுக்கும். இவ்வாறு கூட்டுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.