மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
வாலி, வில்லன், அட்டகாசம், அசல் என சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அஜித். ஆனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்புக்கு மாறிய பிறகு அவர் சிங்கிள் கெட்டப்பிலேயே நடித்து வருகிறார். இந்தநிலையில், வேதாளம் படத்தை அடுத்து சிவாவின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் அஜித். அதில் ஒன்று வரலாற்று கேரக்டராம். அதாவது தெலுங்கில் வெளியான மகதீரா போன்று கடந்த காலம், நிகழ்காலம் என இரண்டு கால கட்டங்களில் நடிக்கும் கதையில் நடிக்கிறாராம் அஜித்.
ஆனால் இந்த செய்தி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கும் விஷ்ணுவர்தனுக்கு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்திருக்கிறது. காரணம், அவர் சோழர் காலத்து கதை ஒன்றை எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து அஜித்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டிருக்கிறார். அது முழுக்க முழுக்க வரலாற்று கதை என்பதால், இந்த நேரத்தில் சிவா இயக்கும் படத்திலும் வரலாற்று கதையில் நடித்தால் தனது கதையில் உடனடியாக நடிக்க அஜித் தயங்க வாய்ப்பிருக்கிறதே என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் விஷ்ணுவர்தன்.