மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தாரைத்தப்பட்டையை அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா உள்பட பல ஹீரோக்களை நடிக்க வைக்கிறார் பாலா. இந்த படத்தின் வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தபோதுதான், தனது குற்றப்பரம்பரை கதையையே பாலா இயக்கயிருந்ததாக பாரதிராஜா குற்றம் சாட்டினார். அதையடுத்து, அவர் பாலாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, குற்றப்பரம்பரை படத்தை நான் இயக்கவில்லை. அதே காலட்டத்தில் நடந்த இன்னொரு கதையைத்தான் படமாக்குகிறேன். உங்கள் கதைக்கும் என் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
என்றாலும், அவர் சொன்னதில் நம்பிக்கையில்லாமல் பல வருடங்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த தனது குற்றப்பரம்பரை படத்தின் பூஜையை உசிலம்பட்டியில் திடீரென்று நடத்தினார் பாரதிராஜா. அந்த பூஜையில் தன்னை சிலர் அவதூறு பேசியதாக பின்னர் ஒரு பிரஸ்மீட் வைத்து கொந்தளித்தார் பாலா. அதையடுத்து அந்த பிரச்சினை ஆப்பாகி விட்டது.
இந்த நிலையில், தனது பட வேலைகளில் அதே விறுவிறுப்புடன் சென்று கொண்டிக்கிறார் பாலா. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு சில முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகிகளையும் புக் பண்ணி வருகிறார். அதில் வரலட்சுமி முக்கியமானவராம். தாரைத்தப் பட்டை படத்தில் அவர் கொடுத்த பர்பாமென்ஸ் பாலாவை வெகுவாக பாதித்து விட, இந்த படத்திலும் அவருக்கு ஒரு அழுத்தமான வேடத்தை கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில் உலகதரத்தில் பேசவைக்கும் அற்புதமாக கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. ஆக, வரலட்சுமிக்குள் இருக்கும் திறமையை ஏற்கனவே வெளிச்சம் போட்டுக்காட்டிய பாலா. இந்த படத்தில் இன்னும் பெரிய அளவுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவார் என தெரிகிறது.