மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் நடிகராகத்தான் வர ஆசைப்பட்டேன், ஆனால் இயக்குநராகிவிட்டேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, திடீரென ஹீரோவாக அவதரித்தார். நியூ, வியாபாரி, இசை போன்ற சில படங்களில் நடித்தார். இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவிற்கு கிடைத்த வெற்றி ஒரு ஹீரோவாக கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து போராடி வருகிறார்.
தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இறைவி என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
நடிகராகும் கனவோடு தான் சினிமாவிற்கு வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக குஷி, வாலி படங்களின் வாய்ப்பு வந்ததால் இயக்கம் பக்கம் போய்விட்டேன். என்ன தான் நான் நியூ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் எப்போது ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நான் நடிக்கிறேனோ அப்போது தான் நான் ஒரு நடிகன் என அனைவரும் ஏற்று கொள்வார்கள். அந்தவகையில், கார்த்திக் சுப்புராஜ் இந்த இறைவி படத்தில் ஒரு முக்கிய ரோல் கொடுத்துள்ளார். அந்தவகையில் என் கனவின் முதல்பாதியை கார்த்திக் சுப்புராஜ் தொடங்கி வைத்துள்ளார் என்று கூறியவர், இந்த இறைவி படம் பெண்களின் உணர்வை மதிக்கும் படமாக இருக்கும் என்றார்.