'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த அரண்மனை-2வில் பேயாக நடித்த த்ரிஷா, அதிலிருந்து தனது ரூட்டை மாற்றத் தொடங்கி விட்டார். அதன்காரணமாக, தனுஷின் கொடி படத்தில் அவருடன் எதிரும் புதிருமான ஒரு வேடத்தில் நடித்திருப்பவர், நாயகி படத்தில் இரண்டுவிதமான வேடங்களில் நடித்திருக்கிறார். ஹாரர் படமாக இருந்தபோதும் இதில் ஒரு வேடத்தில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார் திரிஷா. அதோடு தனது கேரியரில் இதுவரை நயன்தாராவுடன் இணைந்து நடித்திராத அவர் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து விஜயசேதுபதிக்கு ஜோடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்கிறார்.
மேலும், த்ரிஷாவை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள நாயகி படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருப்பதோடு, ஒரே நேரத்தில் வெளியாகவும் தயாராகி விட்டது. இப்படத்தை ஏப்ரல் 29-ந்தேதியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். முன்னதாக, நாயகி படத்தை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட வேண்டும் என்றுதான் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் விஜய்யின் தெறி வெளியாவதால் அந்த படத்திற்கு முன்னால் நாயகி த்ரிஷா காணாமல் போய்விடுவார் என்பதற்காக தேதியை தள்ளி வைத்திருக்கிறார்களாம்.