விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
நடிகர் சந்தானம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன்காரணமாக அடிக்கடி பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்து முடித்துள்ள தில்லுக்குத்துட்டு படத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதிக்கு பட யூனிட்டுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் சந்தானம். இப்போது தில்லுக் குத்துட்டு படத்தை முடித்து விட்டு, சர்வர் சுந்தரம் படத்தில் இறங்கிவிட்டார்.
இந்நிலையில், தில்லுக்குத்துட்டு படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் சந்தானம். தில்லுக்குத்துட்டு படத்தை தொடங்கும்போது யூனிட்டோடு சென்று சாமி தரிசனம் செய்த சந்தானம் இந்தமுறை தான் மட்டுமே சென்றிருக்கிறார். அதோடு, திருப்பதி சென்று வந்த புகைபடங்களை இணையதளங்க ளில் வெளியிட்டது போன்று ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்த புகைப்படங்களையும் இணையதளங்களில் சந்தானம்தரப்பு வெளியிட்டிருக்கிறது.