மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் கார்த்தி, 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான்தான் படத்திற்கு இசையமைப்பாளர். இதுவரை இவை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி தற்போது 'காஷ்மோரா' என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மணிரத்னம் படத்தில் கலந்து கொள்வார் என்கிறார்கள். மணிரத்னத்திடம் இதற்கு முன் உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கார்த்தி, பைலட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். நிஜ வாழ்விலும் சாய் பல்லவி ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான காதல் படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.