மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
12பி படத்தின் மூலம் அறிமுகமான ஷாம் அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தெலுங்கு கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். தன் நடிப்பு திறமைக்கேற்ற சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கருதிய ஷாம் தானே சொந்தமாக '6' என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சொந்தப் படம் தயாரிக்க இருக்கிறார். அதுவும் 3 மொழிகளில் தயாரிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துத் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் புறம்போக்கு . அந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்போதும் என்னை யாராவது எங்கு பார்த்தாலும் 6 படம் பற்றிப் பேசும்போது எனக்கு மகிழ்ச்சியாக மட்டுமல்ல ஆச்சரியமாகவும் இருக்கும்.அந்த அளவுக்கு அது எல்லாரையும் பாதித்துள்ளது.புறம்போக்கு படத்துக்குப் பிறகு நான் ஒரு மெல்லிய கோடு முடித்தேன். பிறகு கன்னடம் தெலுங்கு என்று போய் விட்டேன். ஒரு மெல்லிய கோடு படம் கன்னடத்தில் கேம் என்கிற பெயரில் உருவானது. அங்கே பிப்ரவரி 26-ல் வெளியானது. கன்னடத்தில் இது எனக்கு இரண்டாவது படம்.அது அங்கே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது அங்கே என்னை கேம் ஷாம் என்கிறார்கள்.
நான் தயாரித்து நடித்த 6 எனக்கு லாபத்தை விட நல்ல பெயரையும் பல பாடங்களையும் பெற்றுத்தந்தது. அந்தவகையில் அது எனக்கு லாபமே .பாலாசார் இது மாதிரி கடினமாக உழைக்கிற ஆட்கள் கிடைப்பது அரிது. ஷாமை வைத்துக் கண்டிப்பாக நான் படம் செய்வேன் என்றார்.. இதெல்லாம் சாதாரண பாராட்டு இல்லை. இது 6 படத்தில் நடித்திருக்காவிட்டால் கிடைத்து இருக்குமா?
இப்போது தமிழில் என் தயாரிப்பில் காவியன் என்கிற படம் எடுக்க இருக்கிறோம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில்தான் நடக்கும். அப்படித்தான் கதை அமைந்திருக்கிறது. சாரதி என்பவர் இயக்க இருக்கிறார்.இதைமூன்று மொழிகளில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம். என்றார் ஷாம்.