நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
'சப்வே, நான் படிச்ச ஸ்கூல் அப்படி' என்ற இரண்டு குறும்படங்களின் திரையீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் சற்குணம் பேசியதாவது: இந்த இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன, தரமாகவும் இருந்தன. இன்று குறும்படங்கள் கவனிக்கப்படுகின்றன. இன்றைய தமிழ்ச்சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில் போய்க்கொண்டு இருக்கிறது. குறும்பட இயக்குநர்கள் தான் தமிழ்ச் சினிமாவில் இப்போது தரமான படங்களின் இயக்குநர்களாக, முக்கியமான படங்களின் இயக்குநர்களாக அறியப்படுகிறார்கள். முன்பெல்லாம் ஊரிலிருந்து இங்கு வந்து தான் சினிமாவைக் கற்றுக் கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இங்கே வரும் போதே ஒரு குறும்படம் எடுத்துவிட்டு நேராக தயாரிப்பாளரிடம், நானும் ஒரு சினிமா எடுத்திருக்கிறேன் என்று காட்டிவிட்டு வாய்ப்பு கேட்கிறார்கள். வருங்கால தமிழ்ச் சினிமா இனி குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுவேன் என்றார்.