மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மாதவ் மீடியா தயாரித்துள்ள படம் ஜீரோ. அஸ்வின், ஷிவதா நடித்துள்ள இந்த படத்தை ஷிவ் மோஹா இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு, டைரக்டர் மகேந்திரன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, தனஞ்செயன், ஆரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் டைரக்டர் மகேந்திரன் பேசும்போது, பெரிய ஸ்டார் படங்களை வாங்கி வெளியிடுவது பெரிய விசயமல்ல. புதியவர்களின் படங்களை அவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாங்குவதுதான் பெரிய விசயம். அந்த வகையில், இந்த ஜீரோ படத்தை வாங்கி வெளியிடுவதற்காக தனஞ்செயனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும். இந்த படத்தின் இயக்குனர் பேசும்போது தனது தாய் தந்தையை பற்றி பேசினார். அவர்களுக்கு நன்றி சொன்னார். இந்த தருணத்தில் அவர் பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக அவருக்கு நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எந்த உயரத்திற்கு போனாலும் தாய் - தகப்பனுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டும். அதோடு இந்த படத்தின் முன்னோட்டத்திலேயே நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை அவர் காண்பித்து விட்டார். மேலும், எல்லோருமே கேமராமேனை மறந்து விடுகிறார்கள். அவர்தான் டைரக்டர் நினைப்பதை ஸ்கிரீனில் கொண்டு வரக்கூடியவர். டைரக்டரையும், கேமராமேனையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. வெற்றிமாறனையும் அவரது சிந்தனைகளையும் எப்படி பிரித்துப்பார்க்க முடியாதோ அதேபோலத்தான் டைரக்டரையும், கேமராமேனையும் பிரித்துப்பார்க்க முடியாது.
சமீபகாலமாக நான் எல்லா படங்களையுமே பார்த்து விடுகிறேன். நான் பார்க்காத படமே கிடையாது. ஆனால் வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை. காரணம், நான் வசிப்பது பள்ளிக்கரணையில். பெரும்பாலான படங்களை டிவிடியில் பார்த்து விடுவேன். அவ்வளவுதான் அந்த படங்களுக்கான மரியாதை. ஆனால் விசாரணை போன்ற நல்ல படங்களை நான் தியேட்டருக்கு சென்றுதான் பார்ப்பேன். ஆற அமர உட்கார்ந்து பார்த்து என்சாய் பண்ணுவேன். வெற்றிமாறனெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த கலைஞன். அவரை நூற்றுக்கு பத்து பேராவது பின்பற்ற வேண்டும். நடுவில் அவர் கொஞ்சம் ஓய்வெடுக்கும்போது அந்த இடைவெளியில் இன்னொருவன் வருவான்.
மேலும், நான் எல்லா படங்களையுமே பார்ப்பதற்கு காரணம். அதில் ஏதேனும் ஒரு திறமைசாலி இருப்பார். அவரிடமிருந்து நான் எதாவது கற்றுக்கொள்ளலாம். அது அடுத்து நான் படம் பண்ணும்போது பயன்படும் என்கிற ஆர்வத்தில்தான். இது எல்லாமே நான் ரஜினி சாரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம். ஓடாத படத்தில் ஒர்க் பண்ணிய கேமராமேனைகூட அழைத்து பாராட்டுவார் அவர். அந்த படத்தில் அவரது திறமையை சுட்டிக்காட்டுவார். அந்த அளவுக்கு ரஜினி ஒவ்வொரு விசயத்தையும் துல்லியமாக கவனிக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். இதை ரொம்ப வருசமாக ரஜினி சாரிடம் நான் கவனித்து வந்துள்ளேன். அதன்பிறகுதான் ஓடாத படங்களில்கூட ஒரு நல்ல விசயம் இருக்கும் என்பதை ஆராயத் தொடங்கினேன். இதற்கு காரணம் ரஜினி சார்தான்.
மேலும், எனக்கு இசை என்றாலே இளையராஜாதான் ஞாபகத்துக்கு வருவார். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிவாஸ் கே.பிரசன்னாவும் நன்றாக இசையமைத்திருக்கிறார். தெகிடி படத்தின் பாடல்களை கேட்டிருக்கிறேன். அந்த படத்திற்கு இசையமைத்தவர் இவர்தான் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. கொஞ்சம் வயதான பிறகுதான் மெச்சூரிட்டி வரும் என்பார்கள். ஆனால் இந்த காலத்து இளைஞர்கள் சின்ன வயதிலேயே மெச்சூரிட்டியாகி விடுகிறார்கள். அது இவரது இசையில் தெரிகிறது. அதோடு, இன்றைக்கு நிறைய மோசமான திரைப்படங்கள் வருகிறது. நான் அதை மோசமான படம் என்று சொல்ல மாட்டேன் வீக் ஸ்கிரீன்ப்ளே, பேடு ஸ்கிரீன்ப்ளே என்றுதான் சொல்வேன் என்கிறார் டைரக்டர் மகேந்திரன்.