ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
நயன்தாரா நடித்த மாயா படத்தை தொடர்ந்து பொட்டன்சியல் ஸ்டூடியோ தயாரிக்கும் படம் 'மாநகரம்'. குறும்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹைபர்லிங் டைப்பிலான திரைக்கதையில் தயாராகிறது. அதாவது ஒரே படத்தில் நான்கு கதைகள் இருக்கும், அந்த கதைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஆனால் கேரக்டர்கள் சந்தித்து கொள்ள மாட்டார்கள், அந்த நான்கு பேராக வழக்கு எண் ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி, முனீஷ்காந்த் நடிக்கிறார்கள். ரெஜினா ஹீரோயின், இவர் மட்டும் நான்கு கதைக்குள்ளும் வந்து செல்வாராம்.
பல்வேறு கனவுகளுடன் சென்னைக்கு வரும் இந்த நான்கு பேரையும் சென்னை எப்படி வரவேற்கிறது. வாழ வைக்கிறதா, வீழ்த்துகிறதா என்பதுதான் கதை. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைக்கிறார். இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பேரரசு, சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.