மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் படம் வில் அம்பு. அவரது உதவியாளர் ரமேஷ் சுப்லீரமணியம் இயக்குகிறார். நவீன் இசை அமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, சிருஷ்டி டாங்கே, சமஸ்கிருதி நடித்துள்ளனர். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. படம் பற்றி இயக்குனர் ரமேஷ்சுப்லீரமணியம் கூறியதாவது:
நான் இப்படத்தின் கதையை எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்து தான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும். இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும்.
படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்த தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைத்தோம். படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்க்கிறார்கள். கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹரிஷ் கல்யாணம் வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வாருவார்கள். படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை. உண்மைக்கு அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். என்கிறார் ரமேஷ் சுப்லீரமணியம்.