மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
திரையுலக நட்சத்திரங்கள் பங்கு பெறும் 'செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' என்று அழைக்கப்படும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு இதுவரை நடைபெற்ற மூன்று லீக் ஆட்டங்களிலும் படு தோல்வியடைந்து போட்டியை விட்டே வெளியேறியுள்ளது சென்னை ரைனோஸ் அணி. நாசர், விஷால் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அமைப்பு ஆணித் தரமாக தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த கிரிக்கெட் தோல்வி கவனிக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது.
விஷால் கிரிக்கெட் ஆடாமல் அணியிலிருந்து விலகினார். அதற்கடுத்து ஜீவாவை கேப்டனாக நியமித்தார்கள். ஆனால், அவர் தலைமையில் ஆட முடியாதென விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஆர்யாவை கேப்டனாக நியமித்தார்கள். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சென்னை ரைனோஸ் டீமிற்குள் அரசியல் புகுந்தது. கேரளாவில் நடைபெற்ற ஆட்டத்தின் போது ஸ்ரீப்ரியா, சென்னை அணிக்கு ஒரு தமிழனைக் கூடவா கேப்டனாக நியமிக்க முடியவில்லையா என்ற கேள்வியை எழுப்பினார்.
2011ல் ஆரம்பமான இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது ஆண்டுகளில் சென்னை ரைனோஸ் அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், இந்த 6வது சீசனில் அடுத்த கட்ட போட்டிக்குக் கூடப் போக முடியாமல் பரிதாபகரமான தோல்வி அடைந்தது. இதற்குக் காரணம் அணி வீரர்களுக்குள் ஏற்பட்ட அரசியல்தான் என விஷயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.