ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் அண்ணன் மகன் திலீபன் வத்திக்குச்சி படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து வரும் இரண்டாவது படம் குத்தூசி. அவருக்கு ஜோடியாக புதுமுகம் அமலா அறிமுகமாகிறார். வ.ஜ.ச.ஜெயபாலன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சீனு ராமசாமியின் உதவியாளர் சிவசக்தி இயக்குகிறார். இது விவசாயத்தை மையப்படுத்தும் கதை என்கிறார் சிவசக்தி. மேலும் அவர் கூறியதாவது: நாம் படிக்கவில்லை நம்பிள்ளைகளாது படிக்கட்டும் என்று நமக்கு முந்தைய தலைமுறை தனது வாரிசுகளை விவசாயத்தை விட்டு விரட்டி விட்டது. இப்போது விவசாயம் செய்ய ஆளும் இல்லை, நிலமும் இல்லை. இந்த பிரச்சினை பற்றி பேசும் படம், ஹீரோவின் அப்பா தன் மகனை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்ப தனது நிலத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்க ஏற்பாடு செய்கிறார். இந்த நிலையில் அவர் இறந்துவிட ஹீரோவுக்கு இடத்தை விற்று விட்டு வெளிநாடு செல்லவிருப்பம் இல்லை. விற்க மறுக்கிறார். அப்போது தான் வெளிநாட்டு நிறுவனத்தின் சதிவேலைகள் தெரிகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து ஊரையும், நிலத்தையும், மக்களையும எப்படி ஹீரோ காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் கலந்து ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தாலும் சமூத்துக்கு தேவையான மெசேஜோடு உருவாக்கியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் சிவசக்தி.