மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழில் அஞ்சான் படத்திற்கு முன்பு வரை இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல்தான் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அஞ்சானில் ரசிக கோடிகள் மிரண்டு போகும் அளவுக்கு டூ-பீஸ் நடிகையாக பிரவேசித்தார். ஆனால் கத்தி படத்திற்கு பிறகு தொடர்ந்து அதே ரூட்டில் போனால் இன்னும் சில படங்களோடு வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்பதால் தங்கமகனில் குடும்ப குத்து விளக்காக நடித்த சமந்தா, இப்போது மாடர்ன் ரோல் என்றாலும் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோடு வைத்தே நடிக்கிறார்.
ஆனால், தெலுங்கில் இப்போது அவர் நடித்து வரும் படங்களில் கிளாமர் விசயத்தில் எல்லைக்கோட்டை விலக்கிவிட்டாராம். காரணம், அங்கு இவருக்கு போட்டியாக உருவெடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங், சில படங்களில் கவர்ச்சி சுனாமியாக வெடித்துளளாராம். அதனால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தானும் அஞ்சான் படத்தில் நடித்தது போன்று கவர்ச்சியில் களமிறங்கி நிற்கிறாராம் சமந்தா. இதனால் தெலுங்கில் முதல் ரவுண்டில் கவர்ச்சி எல்லையை அதிகமாக தாண்டாமல் இருந்து வந்த சமந்தா, இப்போது வாரி வழங்கி வருவதால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம்.