மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் நேற்று மலேசியா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திலேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டார் ரஜினிகாந்த். விமான நிலையத்திலேயே பலர் அவரைப் பார்க்க முந்திச் சென்றனர். விமானத்திற்குள் சென்றாலும் ரஜினிகாந்தை ரசிகர்கள் விடவில்லை. நேற்று விமானத்திற்குள் ரஜினிகாந்த் சென்ற பிறகும் அவரை நட்சத்திர ரசிகர்கள் விடவில்லை. அந்த நட்சத்திரங்கள் வேறு யாருமில்லை பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்' படங்களின் நாயகி ஆஷ்னா சவேரிதான் அவர்கள்.
'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் நடிப்பதற்காக மலேசியா செல்வதற்காக அவர்கள் சென்ற அதே விமானத்தில்தான் ரஜினியும் பயணித்துள்ளார். ரஜினிகாந்தைப் பார்த்ததும் இருவரும் அவரிடம் சென்று பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இருவருமே சற்று நேரத்திலேயே அந்த புகைப்படத்தை அவர்களது டிவிட்டரில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காளிதாஸ், 'இந்த நாள் அவ்வளவு இனிமையான நாளாக அமைந்தது,' ஆஷ்னா சவேரி, “ஓ மை காட், இன்றைய சிறப்பான நாள், ஒரு ரசிகையின் சந்தோஷம்,” என்றும் தெரிவித்திருந்தனர்.
மலேசியாவையும், கபாலியையும், ரஜினிகாந்தையும், புகைப்படத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது.