ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் |
பெரிய நம்பிக்கையோடு தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் சானியாஷேக், ஒருவர் மீது இருவர் சாய்ந்து முதல் படம். அதன் பிறகு பனிவிழும் மலர்வனம், அதுவேற இதுவேற, ஜிகினா, வாராயோ வெண்ணிலாவே படங்களில் நடித்தார். சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். எந்த படமும் அவருக்கு சரியாக அமையாதால் ஒரு முழுமையான ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. பெயரைக்கூட சானியாதரா என்று மாற்றிப் பார்த்தார் அதிலும் பலன் கிடைக்கவில்லை.
அவர் நடித்து முடித்திருக்கும், சங்கராபுரம், தகடு தகடு, மெய்மறந்தேன், கடை எண் 6 படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. புதிய படத்திற்கான வாய்ப்பும் வரவில்லை. நடித்து முடித்துள்ள படங்கள் வெளிவந்து அதில் ஒரு படமாவது வெற்றி பெற்றுவிட்டால் தானும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார். புதிதாக போட்டோ ஷ¨ட் நடத்தி புதிய மானேஜரை நியமித்து புதிய வாய்ப்புகளையும் தேடி வருகிறார்.
“எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் அது வந்துவிட்டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்” என்கிறார் சானியாதரா.