'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
கோலிசோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன் அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தார்.
அடுத்து, விக்ரமை வைத்து 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கினார்.
பெரிய பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் மாபெரும் தோல்வியடைந்தது.
அதனால் விஜய்மில்டனின் மவுசு குறைந்துபோனது.
எனவே மீண்டும் லோ பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வெற்றியடைய வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இந்த எண்ணத்தில்தான் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து புதிய படத்தைத் தொடங்க இருந்தார்.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமானநிலையில் கொடுத்த வாக்குக்கு மாறாக தன்னுடைய சம்பளமாக மேலும் சில கோடிகளைக் கேட்டு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் டி. ராஜேந்தர்.
பேச்சுமாறி பேசியதால் டி.ராஜேந்தர் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த விஜய்மில்டன் டி.ஆருக்கு பதில், அவரைப்போலவே காமெடியனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கும் தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக கமிட் பண்ணிவிட்டார்.
தெருக்கூத்து கலைஞனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ராஜகுமாரன்.
ராஜகுமாரன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் பரத் வில்லனாக நடிக்கிறார்.
பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார் விஜய்மில்ட்டன்.