மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சினிமாவில் இதுவரை எனக்காக எந்த நடிகரோ, டைரக்டரோ சிபாரிசு செய்ததில்லை. எனக்கு பொருத்தமான ஒரு வேடம் வரும்போது இதில் இனியாவை நடிக்க வைக்கலாம் என்றுதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் இனியா. மேலும், வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு அதிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரங்கள் கிடைத்தபோதும் அதை மிஞ்சும் அளவுக்கு சரியான ரோல்கள் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். அதேசமயம், இதுவரை கிடைத்த எல்லா வேடங்களிலுமே நான் திருப்தியாகத்தான் நடித்துள்ளேன். காரணம், ஒரு நடிகை என்கிறபோது எல்லாவிதமான ரோல்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. படத்துக்குப்படம் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை என்னிடம் இல்லை.
மேலும், மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால், ஸ்மாட்டான நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தமிழில் அப்படி அல்ல. கதைக்கேற்ப கேட்கிறார்கள். அதோடு அங்கு பர்பாமென்ஸ் மட்டுமே எதிர்பார்ப்பார்கள். ஆனால் இங்கே கவர்ச்சியும் கேட்கிறார்கள். ஆரம்பத்தில் நான் மலையான சினிமாவின் மைண்ட் செட்டில் இருந்தபோதும் இப்போது தமிழ் சினிமாவுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன். அதோடு, மணிரத்னம், ஷங்கர், கெளதம்மேனன் போன்ற முன்னணி டைரக்டர்கள் வளர்ந்த நடிகைகளுக்கே சான்ஸ் கொடுக்கிறார்கள். என்னைப்போன்ற வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கமர்சியல் ரீதியாகவும் என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் இனியா.