நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்தவர் தம்பி ராமைய்யா. அந்தவகையில், வடிவேலுவின் காமெடி இலாகாவிலும் ஒருநேரத்தில் அவர் பங்கேற்றிருந்தார். அந்த சமயத்தில்தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் கதையை அவரிடம் சொல்லி அவரை வைத்து அந்த படத்தை இயக்கினார் தம்பி ராமைய்யா. அதையடுத்து காமெடி வேடங்களில் தொடர்ந்து நடித்த வந்த அவருக்கு, மைனா படத்தில் நடித்த குணசித்ர வேடத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
அதனால், பின்னர் காமெடியில் இருந்து விலகி குணசித்ர வேடங்களில் ஆர்வத்தை செலுத்தி வந்தார் தம்பிராமைய்யா. ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. அதோடு படங்களின் தோல்வி காரணமாக தம்பி ராமைய்யாவின் மார்க்கெட்டும் முன்பை விட இப்போது சரிந்து கிடக்கிறது. விளைவு, தனக்கான காமெடி இடத்தை விட்டு விடக்கூடாது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று இப்போது காமெடி வேடங்களில் நடிப்பதிலும் கவனத்தை திருப்பியுள்ளார் தம்பி ராமைய்யா.