விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சிம்புவும், அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ஆபாசப்பாடல் உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பெண்களும் சமூக அமைப்புகளும் போராட்டம் வருகின்றனர். இன்னொரு பக்கம் ஊருக்கு ஊர் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தும் வருகின்றனர். பெண்களை இழிவு செய்த இவர்களின் செயல் குறித்து திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து சொல்லாமல் அமைதி காத்து வருகின்றனர். நடிகர் சங்கமும் அமைதியாக இருக்கிறது.
சிம்பு அனிருத் செயலுக்கு எதிராக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் எதிர்ப்பை தெரிவித்தார். அடுத்து பா.விஜய் கடுமையாக கருத்து கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்துவோ, 'பாடல் எழுதுபவர்கள் தங்களுக்கு தாங்களே தணிக்கைக்குழு அமைத்துக்கொள்ள வேண்டும்' என்று பட்டும்படாமல் சொல்லி கருத்து சொல்லி இருந்தார்.
இந்நிலையில் அனிருத்தின் உறவினரும், பிரபல காமெடி நடிகருமான ஒய்ஜி மகேந்திரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்,
“தமிழ் சினிமா பாடல்களில் மற்றுமொரு சர்ச்சை. தான் இந்தப் பாடலுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என அனிருத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இப்படியொரு நான்சென்ஸான பாடலுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த அசிங்கத்தில் எந்தவிதமான சென்ஸும் இல்லை. மெலடியும் இல்லை. பீப் சத்தத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு குழந்தைகள் பெரியவர்களை தர்மசங்கடப்படுத்தக்கூடும்.
இப்படியொரு பாடலுக்கு என்ன அவசியம்? இப்படியொரு அசிங்கத்தை வியாதி பிடித்த மனதால் மட்டுமே சிந்திக்க முடியும். கண்ணதாசன் தன் கல்லறையில் நெளிந்து கொண்டிருப்பார். யாரையும் குறை சொல்வதற்கு முன்பாக இப்படியொரு கோரமான பாடலுக்கு யார் பொறுப்பு எனக் கண்டுபிடித்து அவர்களைத் தூக்கில் தொங்கவிட வேண்டும்.” என்று படு காட்டமாக கருத்து தெரிவிதுள்ளார்.
சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தன் மகனை காப்பாற்ற பொய் மேல் பொய் சொல்லி வருகிறார். அனிருத்தின் அங்கிளான ஒய்ஜி மகேந்திரனோ தவறு செய்திருந்தால் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
வெரிகுட்..!