விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மலையாளம் மற்றும் தமிழில் இரவல் குரலோடு நடிக்கும் மேக்னா ராஜ் தாய்மொழியான கன்னடத்தில் சொந்த குரலிலேயே பேசி நடிக்கிறார். இதுவே பெரிய விஷயம் என்றால் நடிப்பது போக பாடுவதையும் பேஷனாக வைத்திருக்கிறார். ஏற்கனவே கன்னடத்தில் ஒரு படத்தில் பாடிவிட்ட மேக்னா ராஜ், மலையாளத்திலும் தான் நடித்த 1௦௦ டிகிரி செல்சியஸ் படத்தில் ஒரு பாடலை பாடினர். சிறுவயதிலேயே இவருக்குள் இருந்த பாடும் திறமையை கண்டறிந்து ஊக்குவித்தது இவர் தந்தைதானாம். அதுமட்டுமல்ல, இசை பற்றிய பல நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தாராம்.
இப்போது மீண்டும் தான் நடித்துவரும் 'தேவரானே பிடு குரு' என்கிற படத்தில் தனது அடுத்த பாடலை பாடியுள்ளார் மேக்னா ராஜ். இந்தப்பாடலில் இன்னும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் கன்னட சினிமாவின் டாப்மோஸ்ட் ஹீரோக்களான புனித் ராஜ்குமார், சுதீப், உபேந்திரா மற்றும் பிரேம் ஆகியோருடன் இணைந்து பாடியிருக்கிறார் மேக்னா ராஜ். நடிப்பதை விட ஒரு பாடகியாக மாறும்போது கிடைக்கும் சந்தோசம் இன்னும் கூடுதலாக இருப்பதாக சொல்லும் மேக்னா ராஜுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதுதான் லட்சியமாம்.. அப்போது தான் தனது இசைப்பயணம் முழுமையடையும் என்கிறார் மேக்னா ராஜ்.