மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'ரஜினி முருகன்' படம் ஆரம்பமானதில் இருந்தே பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாகப் படம் முடிந்து செப்டம்பர் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் ஈராஸ் நிறுவனத்திற்கு 'ரஜினி முருகன்' படத்தைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் பல கோடி ரூபாய் தர வேண்டிய பாக்கிக்காக பட வெளியீடு நின்று போனது. அதன் பின் அந்தப் படம் வெளியாவது எப்போது என்று தெரியாமலே இருந்தது.
இதனிடையே, அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு டிசம்பர் 4ம் தேதி படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒரு பரபரப்பு ஆரம்பமாகிவிட்டது. அந்த பரபரப்பு பட வெளியீட்டில் மட்டுமல்ல, அதற்காக நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இருந்தது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் ஒரே ஒரு கோடி என்கிறார்கள். ஆனால், படம் பிரச்சனையில்லாமல் வெளிவர சிவகார்த்திகேயன் அவர் கையிலிருந்து ஐந்து கோடியைத் தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படித் தரவில்லை என்றால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் வெளியாவதில் சிக்கல் தருவோம் என்றும் மிரட்டினார்களாம்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வெளிவருதற்கு முன்பு சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கா இந்த நிலைமை என திரையுலகத்திலேயே சிலர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடத்தியதில் இரண்டு முக்கிய வினியோகஸ்தர்கள்தான் சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்தார்ககளாம். ஆனால், அந்த வினியோகஸ்தர்களுக்குப் பின் தங்கமான ஒரு முன்னணி நடிகரும் உள்ளார், அவர் ஆலோசனைப்படிதான் அது நடந்தது என்றும் சொல்கிறார்கள். பெரிய இடம் என்றால் வளர்ந்து வரும் ஒரு நடிகருக்கு இப்படித்தான் நெருக்கடி கொடுப்பார்களோ...?