மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள நிவாரண நிதி கேட்டு தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்திற்கு ரூ.940 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதுஒருபுறம் இருக்க தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் நேரடியாக சென்று வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நடிகர்கள் இதுதொடர்பாக வாய் திறக்கவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், நேற்று நடைபெற்ற ஆடியோ விழாவில் கூட ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச்சூழலில், வெள்ள நிவாரணம் தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தின் சார்பில் ரூ.25 லட்சம் நிதி நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். நடிகர் தனுஷ் ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
இந்த நிதி எல்லாம் நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் பல நடிகர்கள் நிதி உதவி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் திரட்டி முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்.