மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் இருந்து மூன்று ஜோடிகளில் மாதவன் - மீரா ஜாஸ்மின், சூர்யா - இஷா தியோல், சித்தார்த் - த்ரிஷா ஆகியோர் இருந்தனர். 2004ல் வெளிவந்த படத்தில் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழில் அப்போதே ஒரு மல்டி ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். ஆனால், அப்போது படத்தில் நடித்த அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்களாகவே இருந்தார்கள். தமிழில் அதற்குப் பிறகு அப்படி ஒரு கூட்டணி மீண்டும் அமையவில்லை.
11 வருடங்களுக்குப் பிறகு அந்த ஜோடிகளில் ஒன்றான சித்தார்த், த்ரிஷா ஜோடி 'அரண்மனை 2' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் இணைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியாக உள்ள 'அரண்மனை 2' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. “12 வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோருடன் பீச்சில் படப்பிடிப்பு. காலம் பறக்கிறது,” தற்போதைய படப்பிடிப்பு பற்றி 'அரண்மனை 2' படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
'அரண்மனை 2' படத்திற்கு முன்பாக சித்தார்த் நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' அடுத்த மாதம் வெளியாகிறது.