பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
சென்னையில் கடந்த 23ம் தேதி திங்கள்கிழமையன்று மாலை ஆரம்பமான மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடும் மழை காரணமாக தெருக்கள் முழுவதும் தேங்கிய மழை நீரால் சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. அலுவலம் முடிந்து வீடு திரும்ப முயற்சித்த பலர் நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும்தான் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
அந்தச் சமயத்தில் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த நடிகை ஹன்சிகா, கிண்டி அருகே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தாராம். அவர் கார் நின்ற இடத்தை விட்டு நீண்ட நேரமாகியும் நகராததால், உதவிக்கு வேறு யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலையில் முழங்கால் அளவிற்குத் தேங்கியிருந்த மழை நீரில் பொதுமக்களுடன் நடந்து அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று தஞ்சமடைந்தாராம்.
மும்பையில் 2005ல் இப்படி ஒரு வெள்ளம் வந்த போது தோழியின் வீட்டிலேயே தங்கியிருந்து விட்டு நிலைமை சீரானதும் வீட்டுக்குச் சென்றதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
சென்னையை என்னுடைய வீடாகவே நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்னுடைய அன்பும், பிரார்த்தனையும் எப்போதுமிருக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.