மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்திய சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். ஆரம்ப காலத்தில் கிளாமர் கதாநாயகியாக வலம்வந்த அவர், பின்னர் தெலுங்கு சினிமாவுக்கு சென்று பக்திமயமான வேடங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில், ஆந்திராவில் அவர் அம்மன் தோற்றத்தில் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற கட்அவுட்டெல்லாம் வைத்தார்கள். அதிரடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆந்திர சினிமா ரம்யா கிருஷ்ணனுக்கு களம் அமைத்துக்கொடுத்தது.
அதன்பிறகு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற பவர்புல் வேடத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். அந்தபடத்தில் ரஜினியுடன் எதிரும் புதிருமாக அவர் நடித்த காட்சிகள் அவருக்கு பெரிய கைதட்டலை வாங்கிக்கொடுத்தன. அதனால் அந்த படம் ரம்யாகிருஷ்ணனின் சினிமா கேரியரில் மறக்க முடியாத முக்கியமான படமாகியது. சமீபத்தில் பாகுபலி படத்திலும் சற்று தில்லான வேடத்தில்தான் நடித்தார் ரம்யாகிருஷ்ணன்.
இந்த நிலையில், புதிய படங்களுக்காக தன்னை தொடர்பு கொள்ளும் தெலுங்கு டைரக்டர்களிடம், படையப்பாவில் தான் நடித்த நீலாம்பரி வேடத்தை நினைவுபடுத்தி, அந்த மாதிரி இன்னொரு அதிரடியான வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பணம் பாக்கெட்டை மட்டும்தான் நிரப்பும். ஆனால் நீலாம்பரி மாதிரி கேரக்டர்களில் நடிப்பது மனதுக்கு திருப்தியை கொடுக்கும் என்கிறாராம் ரம்யாகிருஷ்ணன்.