விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி, கலையரசன், தன்ஷிகா மற்றும் மலேசிய நடிகர்கள் பங்குபெறும் பெருவாரியான காட்சிகளை அங்கே படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது முக்கிய க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவதால், முன்பு ரசிகர்களை படப்பிடிப்புகளுக்கு அனுமதித்தவர்கள் இப்போது பலத்த பந்தோபஸ்து போட்டு படம்பிடித்து வருகிறார்கள்.
மேலும், இந்த படத்தையடுத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை உலக தரத்தில் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் ஷங்கர், கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஒத்திகையை தொடங்கி விட்டார். அந்த வகையில், சமீபத்தில் எந்திரன்-2 நாயகி எமிஜாக்சனை அமெரிக்கா அழைத்து அவருக்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான ஒத்திகை பார்த்தார். அவரைத் தொடர்ந்து இப்போது ரஜினி சம்பந்தப்பட்ட ஒத்திகை நடக்கிறது.
அதன்காரணமாக, நேற்று இரவு மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளாராம் ரஜினி. அங்கு அவர் மூன்று நாட்கள் கிராபிக்ஸ் சம்பந்தப்பட்ட ஒத்திகைகளில் கலந்து கொள்கிறாராம். அதையடுத்து மறுபடியும் மலேசியா சென்று கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். அதனால், இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு கபாலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். இந்த இடைவெளியில் கபாலி டைரக்டர் ரஞ்சித்தும் சில முக்கிய காட்சிகளை ரிகர்சல் பார்க்கிறாராம்.