விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
'யான்' படத்தின் தோல்விக்குப் பிறகு கொஞ்சம் டல்லடித்த நடிகர் ஜீவாவின் கிராஃப் தற்போது உயர்ந்து வருகிறது. 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜீவா அதன் பின் மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற இயக்குனர்களை நம்பி ஏமாந்து போனார். நடுவில் வந்த 'நண்பன்' மட்டுமே அவரைக் கொஞ்சம் காப்பாற்றியது. இருந்தாலும் தோல்வியைக் கண்டு துவளாத ஜீவா தற்போது நான்கைந்து படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார்.
ஜீவா நடித்துள்ள 'திருநாள்' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. 'போக்கிரி ராஜா' படம் விரைவில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்தப் படங்களையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் ஒரு படத்திலும், டீகே இயக்கும் 'கவலை வேண்டாம்' படத்திலும் நடிக்க உள்ளார். நயன்தாரா, ஜீவா, காஜல் அகர்வால் ஆகிய முன்னணி கதாநாயகிகள் தற்போது ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள சில முடிவுகளை எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'திருநாள்' படம் வெளிவந்த பிறகு திரையுலகம் அவரை மீண்டும் திரும்பிப் பார்க்கும் என்கிறார்கள்.